இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது ஓவர் போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகிறது.
ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்று வரும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற சிம்பாப்வே அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 173 ஓட்டங்களை பெற்றது.
இலங்கை அணி சார்பில் சரித் அசலங்க அதிகபட்சமாக 69 ஓட்டங்களையும், முன்னாள் அணித்தலைவர் அஞ்சேலோ மெத்தி யூஸ் 66 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில் சிம்பாப்வே அணி சார்பில் இசியிங் முஷரபணி மற்றும் லுக்கி ஜொங்வே ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
இதற்கமைய சிம்பாப்வே அணிக்கு 174 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
