இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வழிகாட்டலின் கீழ் கற்பக விநாயகர் ஆலயம் லண்டன் மற்றும் பதுளை, பகி பாலச்சந்திரன் சமூக நற்பணி மன்றத்தின் அனுசரணையில் கீழ், பதுளை மாவட்ட செயலகத்தின் இந்துசமய அபிவிருத்தி பேரவையின் ஏற்பாட்டில் பதுளை நகரில் ஆன்மீக ஊர்வலம்,18 பொங்கல். கலை கலாச்சார நிகழ்ச்சிகள் என்பனவற்றை உள்ளடக்கி மாபெரும் பொங்கல் விழா நடாத்தப்பட்டது.
இப்பொங்கல் விழாவானது இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் திரு ய .அநிருத்தனன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக பதுளை மாவட்ட செயலாளரும் சிறப்பு அதிதிகளாக மேலதிக மாவட்ட செயலாளர் (நிர்வாகம்) மேலதிக மாவட்ட செயலாளர் (காணி ) ஆகியோரும் கெளரவ அதிதிகளாக கலாநிதி மகேந்திரன் அகிலன் அமைப்பு மற்றும் கற்பக விநாயகர் ஆலயம் லண்டன் என்பவற்றின் இலங்கைக்கான ஒருங்கிணைப்பாளர் மற்றும் பகி பாலசந்திரன் அறக்கட்டளை நிதியத்தின் ஸ்தாபகர் பகி பாலசந்திரன் ஆகியோரும் ஆலய நிர்வாகங்கள், இந்துசமயம் சார் நிறுவன உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் அறநெறி மாணவர்கள் என 1500 மேற்பட்டவர்கள் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வில் சில பதிவுகள்.











