முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட சாந்தன் மரணமடைந்துவிட்டதாக இந்திய ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.
கல்லீரலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை சாந்தன் உயிரிழந்துள்ளார்.
