மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்.04.03.2024.
இன்று காலை 10 மணிக்கு நுவரெலியா வீதி கொமர்சல் பகுதியில் உள்ள கிங்ஸ் விருந்தினர் விடுதியில் தேர்தல் வன்முறைகளை மேற்பார்வை செய்யும் நிறுவனத்தின் ஊடாக திரு.பசன்ஜயசிங்க மற்றும் ஏ.எம்.என்.விக்ரர் (தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் நிலையம்) ஆய்வாளர் இவர்களின் தலைமையில் இன்று ஆய்வு செய்யப்பட்டது.
இந்த அமர்வில் முன்னால் மத்திய மாகாண சபை உறுப்பினர் ரா.ராஜாராம் உட்பட முன்னால் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் அரசியல் வாதிகள் கலந்து கொண்டனர்.
நுவரெலியா மாவட்டத்தில் எல்லை நிர்ணயத்தால் ஏற்பட்ட அநீதியை விளக்கமாக எடுத்து கூறினார்கள்.

