தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின்மகளிர் தின விழா மகளிரணித் தலைவி திருமதி சரஸ்வதி சிவகுரு தலைமையில் டிக்கோயா தாயகம் மண்டபத்தில் இடம்பெற்றது.
‘பெண்மையைப் போற்றுவோம்” என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்த மகளிர் தின விழாவில் பிரதம அதிதியாக தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரமும் விஷேட அதிதியாக பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமாரும் கலந்து கொண்டனர்.
அட்டன் கல்வி வலயத்தின் முன்னாள் ஆசிரியர் ஆலோசகரும் கவிஞருமான
திருமதி சண்முகநாதன் புவனேஸ்வரி விசேட உரையாற்றினார்.
மேலும் இந்த விழாவில் கலை நிகழ்ச்சிகள் , சொற்பொழிவுகள், கௌரவிப்பு போன்ற நிகழ்வுகளும் இடம் பெற்றன. நிகழ்வுகளைத் தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் பிரிவு இணைப்பாளர் திருமதி மஞ்சுளா தொகுத்து வழங்கினார்.
அத்துடன் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். பிலிப், நிதிச் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன், தேசிய அமைப்பாளர் நகுலேஸ்வரன் ஆகியோரின் வழிநடத்தலில் இடம்பெற்ற இந்த விழாவில் தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் திருமதி வயலட் மேரி, தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதிப் பொதுச் செயலாளர் கல்யாணகுமார், தொழிலாளர் தேசிய சங்கத்தின் சர்வதேச விவகாரம் மற்றும் தொழில் கல்வி செயலாளர் நந்தகுமார், தொழிலாளர் தேசிய முன்னணியின் பிரதி பொதுச் செயலாளர் சண். பிரபாகரன்,தொழிலாளர் தேசிய சங்கத்தின் உபத் தலைவர்களான ராஜமாணிக்கம், கே. கல்யாணகுமார், பிரசாத், கணேசன், உதவிச் செயலாளர்பாலசுந்தரம், இளைஞரணித் தலைவர் சிவனேசன் உட்பட தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசியமுன்னணியின் உயிர்ப்பீட உறுப்பினர்கள், மகளிர் பிரிவு இணைப்பாளர்கள், முழுநேர பெண் உத்தியோகஸ்ர்கள், மாவட்டத் தலைவிகள் ,தோட்டத் தலைவிகள்,உட்பட பெருந்தொகையான மகளிர் கலந்து கொண்டனர்.




