சாதாரணதரப் பரிட்சைக்கு தோற்ற இருந்த மாணவர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்தார்.
கல்வி பொதுத்தராதர சாதாரணதரப் பரிட்சைக்கு தோற்ற இருந்த மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பலாங்கொடை மாரதென்ன பகுதியில் பதிவாகியுள்ளது.
பரீட்சை மத்திய நிலையத்திற்கு செல்வதற்கு முன்பதாக குறித்த மாணவன் அந்த பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு சென்றிருந்த நிலையில் குறித்த மாணவன் தவறி விழுந்து உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். குறித்த மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மரத்தென்ன வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
M.F.M.Ali
