கடந்த வருடங்களில்; முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிக்கப்பட்ட போது எதிர்கொண்ட சிரமங்கள் மற்றும் பெற்றோரின் மனக்குறைகள் குறித்து முழு கவனம் செலுத்தி 2025ஆம் அண்டு முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான சுற்றறிக்கைக்கு தேவையான திருத்தங்களை முன்வைத்து நடைமுறைப்படுத்துவதற்கு கல்வி அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (20) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
