நுவரெலியா – கிரகரி வாவியில் ஜெட் ஸ்கீ (Jet ski) படகில் நீர் விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது விபத்துக்குள்ளான இரண்டு சிறுவர்களை இலங்கை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
நேற்று இடம்பெற்ற இந்தச் சம்பவத்தின் போது, வாவியில் சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் உயிர்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த கடற்படையின் விரைவு மீட்புக் பிரிவினர் உடனடி நடவடிக்கை எடுத்து சிறுவர்களைப் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த 11 மற்றும் 13 வயதுடைய சிறுவர்களே இவ்வாறு கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட இரண்டு சிறுவர்களும் மேலதிக நடவடிக்கைகளுக்காக நுவரெலியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

