விவசாயத்திற்காக நவீன உபகரணங்களைக் கொள்வனவு செய்து கொள்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியின் கீழ் இலகு கடன் முறைமை அறிமுகப்படுத்தப்படுமென அனுராதபுரம் – தம்புத்தேகம பகுதியில் நேற்று இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
10 இலட்சம் புதிய தொழில் முனைவோர்கள் உருவாக்கப்படுவர். தொழிலற்ற இளைஞர்களுக்கு, அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியுமான செலவுடன் கூடிய மூலதனத்தை அடிப்படையாகக் கொண்டு, விவசாயத் துறைக்குள் பிரவேசிப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அதனூடாக நவீன விவசாய உபகரணங்களைக் கொள்வனவு செய்து விவசாயம் செய்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.
அதற்கமைய விவசாயத்திற்கான இலகு கடன் முறைமை அறிமுகப்படுத்தப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
