ஹட்டன் டிக்கோயா மாநகர சபைக்கு சொந்தமான வாகன தரிப்பிடத்தில் குப்பைகள் குவிந்து கிடப்பதால், மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
குறித்த இடத்தில், ஹட்டன் ஸ்ரீ நிரோதாராம விஹாரையும், ஹட்டன் ஸ்ரீபாத கல்லூரி, இரண்டு முன் பள்ளி பாடசாலையும் அமைந்துள்ளன.
ஹட்டன் பிரதேசத்தில் தற்போது சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் குறித்த இடத்தில் கொட்டி குவிந்து கிடப்பதால் அந்த வீதியில் பயணிக்கும் மக்கள் பாடசாலை, மாணவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்த குப்பைக் குவியலால் நுளம்பு தொல்லை காரணமாக குறித்த பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரை மற்றும் ஆலய வழிபாடுகளுக்கு தரிசனம் செய்பவர்களுக்கு மதியம் அன்னதானம் முறையாகப் பெற முடியாத நிலை ஏற்பட்டதுடன் இவ்வாறான நிலமையால் விகாரையில் உள்ள பௌத்த மத துறவிகள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலைமைகள் தொடர்பில் கருத்து தெரிவித்த ஹட்டன் ஸ்ரீபாதா கல்லூரியில் கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் இரண்டு முன் பள்ளிகளை சேர்ந்த பிள்ளைகள் இந்த இடத்தில் குப்பைகள் குவிந்து கிடப்பதால் பாடசாலை செல்லும் பிள்ளைகள் உட்பட தமது பிள்ளைகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர் என தெரிவித்தனர்.
இந்த நிலை குறித்து மக்களும், சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளும் கவனம் செலுத்த வேண்டும்.
இந்த சுற்று சூழல்கள் குறித்து விசாரணை நடத்தியதில், ஹட்டன் நகர சபை செயலாளர் செயலர் டி. வி. பண்டார. ஹட்டன் டிக்கோயா மாநகர சபையில் சேகரிக்கப்படும் குப்பைகளை அகற்றுவதற்கு உரிய இடம் இல்லாதது பாரிய பிரச்சினையாக அமைந்துள்ளது என பண்டார தெரிவித்தார்.
மஸ்கெலியா தினகரன் விசேட நிருபர்.