Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் 11 தொழிலாளர்கள் மஸ்கெலியா வைத்தியசாலையில்.

August 27, 2026

இன, மத மோதல்களுக்கு மீண்டும் இடமில்லை: தேசிய மீலாதுன் விழாவில் ஜனாதிபதி அநுர அறிவிப்பு

August 27, 2026

சமூக ஊடகங்களில் சிறுவர், பெண்களின் புகைப்படங்கள் விற்பனை: அமைச்சு அவசர எச்சரிக்கை

August 27, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » எமது பிரதிநிதித்துவத்தை இழந்து அடைய நினைக்கும் மாற்றம் ஆபத்தானமாகவே இருக்கும் – ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் எம்.ராமேஷ்வரன் தெரிவிப்பு
இலங்கை

எமது பிரதிநிதித்துவத்தை இழந்து அடைய நினைக்கும் மாற்றம் ஆபத்தானமாகவே இருக்கும் – ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் எம்.ராமேஷ்வரன் தெரிவிப்பு

ThanaBy ThanaOctober 23, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

(க.கிஷாந்தன்)

மாற்றமென்பது மக்களுக்கு நன்மை பயக்ககூடியதாக இருக்க வேண்டும். தமிழ்ப் பிரதிநிதித்துவமென்பது மிக முக்கியம். எனவே, எமது பிரதிநிதித்துவத்தை இழந்து அடைய நினைக்கும் மாற்றம் ஆபத்தானமாகவே இருக்கும்.” – என்று இதொகாவின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்தார்.

மஸ்கெலியா, அப்கொட் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

‘ பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அனைவருக்கும் சம்பள உயர்வு கிடைக்கப்பெற்றது. நாம் காங்கிரஸின் அங்கத்தவர்களுக்கு மட்டுமா சம்பள உயர்வை பெற்றுக்கொடுத்தோம்? இல்லை. அனைத்து தொழிலாளர்களுக்கும் பெற்றுக்கொடுத்தோம்.

எமது பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானும், நானும் அரசாங்கத்தில் அங்கம் வகித்ததால் இம்முறை பெரும் போராட்டங்கள் இன்றி, சம்பளத்தை பெறக்கூடியதாக இருந்தது.

காணி உரிமையை பெற்றுக்கொடுப்பதற்குரிய ஏற்பாடுகளை செய்திருந்தோம். அதற்குரிய நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. பெருந்தோட்டப் பகுதிகளில் கல்வி மேம்பாட்டுக்கும் முக்கியத்துவம் வழங்கியுள்ளோம்.

சில வேட்பாளர்கள் மக்களுக்கு எதையும் செய்யாததால் தோட்டப்பகுதிகளுக்கு வருவதற்கு அஞ்சுகின்றனர். நாம் சேவை செய்துள்ளதால் உரிமையுடன் மக்களிடம் வாக்கு கேட்டு வருகின்றோம். ஆனால் காங்கிரஸ் எதையும் செய்யவில்லை என சிலர் போலி பிரச்சாரம் முன்னெடுத்துவருகின்றனர். இவ்வாறு குறைகூறுபவர்கள் மக்களுக்கு என்ன செய்துள்ளனர்? ஒன்றும் செய்யவில்லை. மாறாக காங்கிரஸை விமர்சித்து அரசியல் செய்யலாம் என நினைக்கின்றனர்.

தமிழ்ப் பிரதிநிதித்துவமென்பது மிக முக்கியம். அதற்கா சில விட்டுக்கொடுப்புகளைக்கூட செய்தோம். அனைத்து தமிழ்க் கட்சிகளுடனும் பேச்சு நடத்தினோம். ஆனால் மாற்று தரப்புகள் அதற்கு உரிய பதிலை வழங்கவில்லை. மாற்றம் என்பது நமது மக்களுக்கான மாற்றமாக இருக்க வேண்டும். மாறாக நமது பிரதிநிதித்துவத்தை இழந்து மாற்றத்தை தேடினால் அது ஆபத்தில்தான் முடியும்.” – என்றார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    இன, மத மோதல்களுக்கு மீண்டும் இடமில்லை: தேசிய மீலாதுன் விழாவில் ஜனாதிபதி அநுர அறிவிப்பு

    August 27, 2026

    சமூக ஊடகங்களில் சிறுவர், பெண்களின் புகைப்படங்கள் விற்பனை: அமைச்சு அவசர எச்சரிக்கை

    August 27, 2026

    மருதானையில் சட்டவிரோத மருந்தகம் முற்றுகை: அரச வைத்தியசாலை மருந்துகள் மீட்பு

    August 27, 2026

    இலங்கைத் தூதரகத்தின் அவசர எச்சரிக்கை: நேபாளத்தில் உள்ள இலங்கையர்களுக்கான அறிவுறுத்தல்

    August 27, 2026
    Editors Picks

    குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் 11 தொழிலாளர்கள் மஸ்கெலியா வைத்தியசாலையில்.

    August 27, 2026

    இன, மத மோதல்களுக்கு மீண்டும் இடமில்லை: தேசிய மீலாதுன் விழாவில் ஜனாதிபதி அநுர அறிவிப்பு

    August 27, 2026

    சமூக ஊடகங்களில் சிறுவர், பெண்களின் புகைப்படங்கள் விற்பனை: அமைச்சு அவசர எச்சரிக்கை

    August 27, 2026

    மருதானையில் சட்டவிரோத மருந்தகம் முற்றுகை: அரச வைத்தியசாலை மருந்துகள் மீட்பு

    August 27, 2026

    குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் 11 தொழிலாளர்கள் மஸ்கெலியா வைத்தியசாலையில்.

    August 27, 2026

    இன, மத மோதல்களுக்கு மீண்டும் இடமில்லை: தேசிய மீலாதுன் விழாவில் ஜனாதிபதி அநுர அறிவிப்பு

    August 27, 2026

    சமூக ஊடகங்களில் சிறுவர், பெண்களின் புகைப்படங்கள் விற்பனை: அமைச்சு அவசர எச்சரிக்கை

    August 27, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.