குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் 11 தொழிலாளர்கள் மஸ்கெலியா வைத்தியசாலையில்.
இன்று 27 ம் திகதி மாலை 3 மணிக்கு மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ஆர். பி.கே பெருந்தோட்ட பொறுப்பில் உள்ள மஸ்கெலியா ஹப்புகஸ்தனை தோட்டத்தில் உள்ள தொழிலாளர்கள் ஆண்கள் 7 பேர் பெண்கள் 4 பேர் அடங்கிய பத்து பேர் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்ற பிறகு வெளியேறி உள்ளனர் என வைத்திய சாலையில் உள்ள வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
இவர்களில் 6 வயது உடைய சிறுவர் இருவரும் 12 வயதுடைய சிறுவன் ஒருவன் அடங்கலாக 11 பேர் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச் சம்பவம் இன்று பௌர்ணமி தினத்தில் தாங்கள் பணிபுரியும் தேயிலை செடிகள் அடங்கிய தேயிலை மலைக்கு முனியாண்டி சுவாமி கும்பிட போன வேலையில் மரத்தின் கீழ் பகுதியில் நெய் வைத்தியம் செய்து கொணடு இருந்த வேளையில் புகை அதிகம் ஏற்பட்டதால் குளவி கூடு களைந்து கொட்டியதில் 11 பேர் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலைக்கு கொண்டு வர பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.
மஸ்கெலியா தினகரன் விசேட நிருபர்
Show quoted text
