பசறை நிருபர் 11.12.2024
கொரிய நாட்டின் சர்வதேச ஒத்துழைப்பு நிருவகம் , கொரிய கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள் ,நம்நாட்டு கல்வி அமைச்சின் தகவல் தொழில்நுட்ப பணிப்பாளர், ஊவா மாகாண கல்விப் பணிப்பாளர், ஊவா மாகாண திட்டமிடல் பணிப்பாளர்,பண்டாரவளை கல்வி வலய மட்ட திட்டமிடல் பிரிவு உத்தியோகத்தர்கள் ஆகியோரின் பங்குபற்றலுடன் பண்டாரவளை கல்வி வலயத்தின் எல்ல கல்விக் கோட்டத்தில் அமைந்துள்ள நமுனுகுல, பிங்கராவ தமிழ் வித்தியாலயத்தில் “கல்விப்புல முகாமைத்துவத்தில் தகவல் தொழில்நுட்பம்” என்ற செயற்றிட்டத்தின் ஊடாக பாடசாலைகளின் தகவல்களை குறித்த ஒரு முறையின் கீழ் இற்றைப்படுத்தி தேசிய ரீதியில் பயன்படுத்துவது தொடர்பான பரீட்சார்த்த ஆய்வினை மேற் கொண்டனர். இந்நிகழ்வு பாடசாலையின் அதிபர் பாரதலிங்கம் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் சில காட்சிகளைப் படங்களில் காணலாம்.




