நன்பேரியல் சுற்றுலா தளத்தில் உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை
வரும் சுற்றுலா பயணிகள் தமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய பாரிய அசௌகரியங்களை சந்தித்து வருகின்றனர்.
பலாங்கொடை பெலிஹுல்ஓயா நன்பேரியல் சுற்றுலா தளத்தில் உட்கட்டமைப்பு வசதிகள் இன்மையால், வரும் சுற்றுலா பயணிகள் தமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய தேயிலை தோட்டங்கள் ஆற்றங்கரை வனப்பகுதிகளை பாதிப்பதால் உயிர் ஆபத்துக்கள் மற்றும் சுற்றுச்சூழல் மாசடைவதோடு பிரதேச மக்கள் தமது அன்றாட தேவைக்காக பயன்படுத்தும் குடிநீரும் அசுத்தம் அடைவதால் பாரி அசௌகரியங்களை சந்தித்து வருகின்றனர் .அத்தோடு குறிப்பிட்ட பகுதியில் தொற்று நோய் பரவுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக குறித்த பகுதியை பார்வையிட வரும் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
உலகில் புகழ் பெற்ற நன்பேரியல் சுற்றுலா தளம் என்பது குறிப்பிடத்தக்கது.
கொழும்பு பதுளை பிரதான வீதியில் பெலிஹுல்ஓயா பிரதேசத்தில் இருந்து 21 km தூரம் செல்லும் போது இந்த நன்பேரியல் சுற்றுலா தளம் காணப்படுகிறது.
குறித்த பகுதியில் இலங்கை போக்குவரத்து சபை சொந்தமான ஒரு பேருந்து சேவையில் உள்ளது.
கடல் மட்டத்தில் இருந்து 5000 அடி உயரத்தில் உள்ள நன்பேரியல் சுற்றுலா தளத்தில் உள்ள break bend வளைவு மற்றும் மேல்பகுதியில் 7000 அடி உயரத்தில் உள்ள நங்ரேன் பிரதேசத்தை பார்வையிட உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவதும் குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக கடந்த வாரத்தில் ஒரு அவுஸ்திரேலியா பிரஜை சிறுநீர் கழிக்க சென்ற சந்தர்பத்தில் தவரி விழுந்து உயிரிழந்த சம்பவமும் குறிப்பிட தக்கது.
