தற்போதைய அரசாங்கத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் வழங்கப்படாது என்பதை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (05) உறுதிப்படுத்தினார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் இன்று செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“எங்கள் அரசாங்கம் எம்.பி.க்களுக்கு வாகன அனுமதிப்பத்திரங்களை வழங்காது. எம்.பி.க்கள் தங்கள் கடமைகளைச் செய்ய ஒரு வாகனத்தை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. 5 ஆண்டு பதவிக்காலம் முடிந்ததும், வாகனத்தை திருப்பி ஒப்படைக்க வேண்டும்.”
“ஆடம்பரமற்ற வாகனத்தை வழங்குவதற்காக தற்போது வாகன இருப்பை தயாரிக்க நேரமில்லை.”
“இருப்பினும், நாட்டின் பொருளாதார நிலைமையைக் கருத்தில் கொண்டு, எம்.பி.க்களுக்கு வாகனங்களை இறக்குமதி செய்யும் எண்ணம் எங்களுக்கு இல்லை. “எங்கள் முன்னுரிமை பாராளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்கள் அல்ல.” என்றார்.
