கட்டாக்காலி நாய் தொல்லை மஸ்கெலியா நகரில் அதிகரித்துள்ளதால் பாதசாரிகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் சாமி மலை ,மஸ்கெலியா, நல்லதண்ணி ஆகிய நகரங்களில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது.
இதனால் நகருக்கு வரும் பொது மக்கள், பாடசாலை மாணவர்கள் பெரிதும் பாதிக்க பட்டுவருகின்றனர்.இது குறித்து சம்பந்தப்பட்ட மஸ்கெலியா பிரதேச சபை உடன் கவணம் செலுத்தி கட்டாக்காலி நாய் தொல்லையில் இருந்து மக்களை காக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
மஸ்கெலியா நிருபர்.
