ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணியில் இருந்து தம்மை விடுவிக்குமாறு பானுக ராஜபக்ஷ இலங்கை கிரிக்கெட் சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளார் என தெரிவிக்கப்டுகின்றது.
ஒருநாள் போட்டிகளில் இருந்து தனக்கு ஓய்வு தேவை என்று கூறி பானுக ராஜபக்ச இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.
இதேவேளை, அபுதாபி லீக் கிரிக்கெட் போட்டியில் விளையாட பானுக ராஜபக்ஷவுக்கு அனுமதி வழங்குவதில்லை எனவும் இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.