மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி, உயிரிழந்தவர் ஹசலக பகுதியை சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.
அவர், ஹங்குரான்கெத்த பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவருடன் தங்குவதற்காக இந்த விடுதி அறையை முன்பதிவு செய்துள்ளார். குறித்த பெண்ணை அவர் சமீப காலத்திலேயே அறிமுகம் செய்துகொண்டதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அந்த பெண் மஹியங்கனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மஹியங்கனை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
