Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கடந்த இரு வருடங்களில் 1,500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாடசாலைகளிலிருந்து விலகல்!

May 20, 2026

நாட்டில் தீவிரமடையும் டெங்கு : இதுவரையில் 29,589 நோயாளர்கள் பதிவு, 15 பேர் பலி!

May 20, 2026

கல்கிஸ்ஸவில் சட்டவிரோத தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையம் முற்றுகை: மாலைத்தீவு நபர் கைது!

May 20, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » நுவரெலியாவில் -அரச சேவைகள் குறித்து விழிப்புணர்வு: வீதி நாடகத்துடன் கூடிய பாதயாத்திரை!
மலையகம்

நுவரெலியாவில் -அரச சேவைகள் குறித்து விழிப்புணர்வு: வீதி நாடகத்துடன் கூடிய பாதயாத்திரை!

ThanaBy ThanaMay 19, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

​
நுவரெலியா மாவட்ட நழிவுற்ற சமூகத்தை மேன்மைப்படுத்தும் அமைப்பினரின் ஏற்பாட்டில், மக்களுக்கு அரச சேவைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விசேட பாதயாத்திரையும் வீதி நாடகமும் இன்று (19) நுவரெலியாவில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

​அசுவெசும (Aswesuma) நலன்புரித் திட்டம், பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்கள், மற்றும் EPF, ETF போன்ற அரசினால் வழங்கப்படக்கூடிய அத்தியாவசிய சேவைகளை பொதுமக்கள் எவ்வாறு எவ்வித சிரமமுமின்றி பெற்றுக்கொள்வது என்பது குறித்து விழிப்புணர்வு ஊட்டுவதே இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாகும்.

​இந்நிகழ்வானது நுவரெலியா பொலிஸ் நிலையத்தின் அருகாமையில் இருந்து உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. அங்கிருந்து விழிப்புணர்வுப் பாதயாத்திரையாகப் புறப்பட்ட அமைப்பின் உறுப்பினர்களும் பொதுமக்களும், நுவரெலியா பிரதான வீதி ஊடாக தபால் நிலைய வீதியை வந்தடைந்தனர்.

​தொடர்ந்து, நுவரெலியா பிரதான தபால் நிலையத்திற்கு முன்னால் உள்ள சுற்றுவட்டப் பகுதியில், இந்த விழிப்புணர்வுக்கான விசேட வீதி நாடகம் அரங்கேற்றப்பட்டது.
​

​பொதுமக்களுக்கு அரசினால் வழங்கப்படக்கூடிய பல்வேறு நலத்திட்டங்களையும் உரிமைகளையும், தத்தமது பிரதேச கிராம உத்தியோகத்தர்கள் (Gramasewaka) ஊடாக எவ்வாறு மிக இலகுவாகப் பெற்றுக்கொள்ளலாம் என்பது குறித்து இந்த வீதி நாடகத்தின் மூலம் மிகத் தெளிவாகவும், சுவாரசியமாகவும் மக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

​இந்நிகழ்வில், அசுவெசும கொடுப்பனவுகள் இதுவரை கிடைக்கப்பெறாத தகுதியுடைய பயனாளிகள், நழிவுற்ற சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் நலன்புரிகள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டு பயனடைந்தமை குறிப்பிடத்தக்கது.
​செய்தித் தொகுப்பு: கஜரூபன் திவ்யா

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    சாமிமலை முச்சக்கர வண்டி சாரதிகள் எதிர்கொள்ளும் வாழ்வாதார நெருக்கடி: மஸ்கேலியா பிரதேச சபைக்கு அவசர கோரிக்கை!

    May 19, 2026

    நாட்டின் பெரும்பாலான இடங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்

    May 18, 2026

    மத்திய மலைநாட்டில் தொடரும் மழையுடனான காலநிலை உள்ளூர் சந்தைகளில் மறக்கறிகளின் விலை உயர்வு.

    May 17, 2026

    பெருந்தோட்டங்களில் இடம்பெறும் -தாக்குதல்கள் தொடர்பில்  பல்தரப்பு மாநாடு-தமுகூ தலைவ‌ர் மனோ விடம் அமைச்சர் விஜயபால இணக்கம்>

    May 16, 2026
    Editors Picks

    கடந்த இரு வருடங்களில் 1,500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாடசாலைகளிலிருந்து விலகல்!

    May 20, 2026

    நாட்டில் தீவிரமடையும் டெங்கு : இதுவரையில் 29,589 நோயாளர்கள் பதிவு, 15 பேர் பலி!

    May 20, 2026

    கல்கிஸ்ஸவில் சட்டவிரோத தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையம் முற்றுகை: மாலைத்தீவு நபர் கைது!

    May 20, 2026

    நாட்டின் மீது தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை ஆரம்பம்

    May 20, 2026

    கடந்த இரு வருடங்களில் 1,500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாடசாலைகளிலிருந்து விலகல்!

    May 20, 2026

    நாட்டில் தீவிரமடையும் டெங்கு : இதுவரையில் 29,589 நோயாளர்கள் பதிவு, 15 பேர் பலி!

    May 20, 2026

    கல்கிஸ்ஸவில் சட்டவிரோத தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையம் முற்றுகை: மாலைத்தீவு நபர் கைது!

    May 20, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.