Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

டிக் டொக் பார்க்க கைபேசி தராததால் கொடூரம்: 11 வயதுச் சகோதரியைக் கொலை செய்த 14 வயது அண்ணன் கைது!

May 30, 2026

அட்டமஸ்தானத்தின் பணிகளை தற்காலிகமாகக் கவனிக்க ஈதலவெடுனுவெவே ஞானதிலக்க தேரர் நியமனம்!

May 30, 2026

பௌத்த தர்மம் என்பது ஒட்டுமொத்த உலகிற்கும் நடைமுறைச்சாத்தியமான, எக்காலத்திற்கும் பொருத்தமான அமைதிச் செய்தியைக் கொண்டு வந்த மிகச் சிறந்த போதனையாகும்

May 30, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » அட்டமஸ்தானத்தின் பணிகளை தற்காலிகமாகக் கவனிக்க ஈதலவெடுனுவெவே ஞானதிலக்க தேரர் நியமனம்!
இலங்கை

அட்டமஸ்தானத்தின் பணிகளை தற்காலிகமாகக் கவனிக்க ஈதலவெடுனுவெவே ஞானதிலக்க தேரர் நியமனம்!

ThanaBy ThanaMay 30, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

அட்டமஸ்தானத்தின் பணிகளை தற்காலிகமாகக் கவனிப்பதற்காக, வடமத்திய திசையின் பிரதம சங்கநாயக்கரும் ருவன்வெலி சைத்தியாராமாதிகாரியுமான வணக்கத்திற்குரிய ஈதலவெடுனுவெவே ஞானதிலக்க நாயக்க தேரர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளதாக மல்வத்து மகா விகாரை இன்று (30) அறிவித்துள்ளது.

மல்வத்து மகா விகாரைப் பிரிவின் கண்டி வலயத்தின் பிரதம சங்கநாயக்கரும் தற்போதைய அட்டமஸ்தானாதிபதியுமான வணக்கத்திற்குரிய பல்லேகம ஹேமரதன தேரருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்து, இறுதித் தீர்மானம் எட்டப்படும் வரை இந்த தற்காலிக நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மல்வத்து பிரிவின் செயலாளர் கலாநிதி வணக்கத்திற்குரிய பஹமுணே சுமங்கல நாயக்க தேரரின் கையொப்பத்துடன் இந்த உத்தியோகபூர்வ அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

 

இது தொடர்பாக வௌியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கை:

தற்போது இந்த இரு பதவிகளையும் வகிக்கும் பல்லேகம ஹேமரதன ஸ்தவிரரின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து அவதானம் செலுத்திய மல்வத்து மகா விகாரையின் மகா சங்க சபை, சம்பந்தப்பட்ட தரப்பினரை அழைத்து இது குறித்து விசாரணை நடத்தியது.

இதற்கமைய, 2026.05.30 அன்று கூடிய மல்வத்து மகா விகாரையின் கௌரவ மகா சங்க சபைக் கூட்டத்தில், பல்லேகம ஹேமரதன ஸ்தவிரருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் மீதான நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடைந்து இறுதித் தீர்ப்பு வரும் வரை, அவருக்கு வழங்கப்பட்டிருந்த  கண்டி வலய பிரதம சங்கநாயக்க பதவியை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

மேலும், மகா சங்க சபையின் உத்தரவின் பேரில், அட்டமஸ்தானக் குழுவின் உறுப்பினரும் வடமத்திய திசையின் பிரதம சங்கநாயக்கரும் ருவன்வெலி சேத்தியாராமாதிகாரியுமான ஈதலவெடுனுவெவே ஞானதிலக்க நாயக்க ஸ்தவிரரை, அதமஸ்தானாதிபதி பதவியின் பணிகளை தற்காலிகமாகக் கவனிப்பதற்காக நியமிக்க அதமஸ்தானக் குழு தீர்மானித்துள்ளதாக, மல்வத்து மகா விகாரைப் பிரிவின் அதிவணக்கத்திற்குரிய மகாநாயக்க தேரரின் கட்டளைக்கு இணங்க இத்தால் அறிவிக்கின்றேன்.”

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    டிக் டொக் பார்க்க கைபேசி தராததால் கொடூரம்: 11 வயதுச் சகோதரியைக் கொலை செய்த 14 வயது அண்ணன் கைது!

    May 30, 2026

    பௌத்த தர்மம் என்பது ஒட்டுமொத்த உலகிற்கும் நடைமுறைச்சாத்தியமான, எக்காலத்திற்கும் பொருத்தமான அமைதிச் செய்தியைக் கொண்டு வந்த மிகச் சிறந்த போதனையாகும்

    May 30, 2026

    பொதுச் சேவைகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ‘அத்தியாவசிய சேவைகளாக’ ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பிரகடனப்படுத்தியுள்ளார்.

    May 29, 2026

    மட்டக்களப்பு விடுதி தீ விபத்து: இரு பிள்ளைகள் பலியான சோகம் – பிச்சை எடுப்பதற்காக நாடகமாடிய ‘போலி’ தந்தை கைது! அதிர்ச்சி பின்னணி வௌியானது.

    May 29, 2026
    Editors Picks

    டிக் டொக் பார்க்க கைபேசி தராததால் கொடூரம்: 11 வயதுச் சகோதரியைக் கொலை செய்த 14 வயது அண்ணன் கைது!

    May 30, 2026

    அட்டமஸ்தானத்தின் பணிகளை தற்காலிகமாகக் கவனிக்க ஈதலவெடுனுவெவே ஞானதிலக்க தேரர் நியமனம்!

    May 30, 2026

    பௌத்த தர்மம் என்பது ஒட்டுமொத்த உலகிற்கும் நடைமுறைச்சாத்தியமான, எக்காலத்திற்கும் பொருத்தமான அமைதிச் செய்தியைக் கொண்டு வந்த மிகச் சிறந்த போதனையாகும்

    May 30, 2026

    ராகலை – மஹாகுடுகலை பகுதியில் மர்ம வெடிப்பு: குடும்பத் தலைவி படுகாயம்; நீதிக்காகக் குரல் கொடுக்கும் மக்கள்!

    May 29, 2026

    டிக் டொக் பார்க்க கைபேசி தராததால் கொடூரம்: 11 வயதுச் சகோதரியைக் கொலை செய்த 14 வயது அண்ணன் கைது!

    May 30, 2026

    அட்டமஸ்தானத்தின் பணிகளை தற்காலிகமாகக் கவனிக்க ஈதலவெடுனுவெவே ஞானதிலக்க தேரர் நியமனம்!

    May 30, 2026

    பௌத்த தர்மம் என்பது ஒட்டுமொத்த உலகிற்கும் நடைமுறைச்சாத்தியமான, எக்காலத்திற்கும் பொருத்தமான அமைதிச் செய்தியைக் கொண்டு வந்த மிகச் சிறந்த போதனையாகும்

    May 30, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.