அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்றாசி நகரத்தில் உணவகம் ஒன்றில் ஐஸ் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த இரண்டு இளைஞர்களை பொலிஸார் 07.06.2026 மாலை 6.30 மணியளவில் கைதுசெய்துள்ளனர்.
பொலிஸார். மற்றும் புலனாய்வு அதிகாரிகள் இணைந்து தீடிரென குறித்த கடையினை முற்றுகை இட்டு பரிசோதனையை மேற்கொண்டபோது. ஐஸ் போதையுடன் இருவரையும் கைது செய்தனர். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த பண்டார தலைமையிலான குழுவின் முயற்சியால் நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் இது தொடர்பான விசாரணையை பொலீசார் முன்னெடுத்து வருகின்றனர்.
கௌசல்யா
