இந்தியா டெல்லியில் நடக்கும் தலைமைத்துவ பயிற்சிக்காக தொழிலாளர் தேசிய முன்னணியின் பிரதி பொது செயலாளர் சுப்பையா கமலதாசன் டெல்லி பயணம்.
இந்திய அரசாங்கத்தின் வெளிநாட்டு அமைச்சு மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சு இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 5 நாள் தலைமைத்துவ பயிற்சிநெறி 13 – 17 வரை டெல்லியில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் கலந்துக்கொள்வதற்காக தொழிலாளர் தேசிய முன்னணியின் பிரதி பொது செயலாளர் சுப்பையா கமலதாசன் டெல்லி சென்றுள்ளார்.
கெர்க்ஸ்வோல் இல 2 மற்றும் ஹைலண்ட்ஸ் கல்லூரிகளின் பழைய மாணவரான அவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் ஊடகவியல் டிப்ளொமாவினை நிறைவு செய்துள்ளார். தற்போது சென்மேரிஸ் கனிஸ்ட பாடசாலையின் பாடசாலை அபவிருத்திக்குழுவின் செயற்குழு உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
