அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் மகாவலி கங்கையை அண்மித்துள்ள பல தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று நள்ளிரவு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவித்தல், நாளை (04 ஆம் திகதி) நள்ளிரவு 12.30 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, கண்டி மாவட்டத்தில் மகாவலி கங்கையை அண்மித்துள்ள:
உடுநுவர
உடபலாத
யடிநுவர
கங்கஇஹல கோரள
பஸ்பாகே கோரள மற்றும்
கங்கவட கோரள
ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட தாழ்நிலப் பகுதிகளுக்கு இந்த வெள்ள அபாய அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் காலப்பகுதியில் மேலும் மழை பெய்யக்கூடும் என்பதால், குறிப்பிடப்பட்ட பகுதிகளில் மகாவலி கங்கையை அண்டியுள்ள மற்றும் தாழ்நிலப் பகுதிகளில் வாழும் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், வெள்ளப் பெருக்கிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறும் நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
