யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலை பீடத்தில் கல்வி கற்று வந்த கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயதுடைய நிரோஷினி என்ற மாணவி உயிரிழந்துள்ளார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இம்மாணவி கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி வைத்தியசாலையிலேயே உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இம்மாணவியின் மறைவுக்குப் பல்கலைக்கழக சமூகத்தினரும், மாணவர்களும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
