ஜப்பானில் இலங்கை இளைஞர் குத்திக் கொலை – மற்றொருவர் கைது
ஜப்பானின் சிபா (Chiba) மாநிலத்தில் 21 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஜப்பானில் கல்வி பயின்று வந்த இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த கொலையை, உயிரிழந்தவருடன் ஒரே இடத்தில் தங்கியிருந்த 18 வயதுடைய மற்றுமொரு இலங்கை இளைஞர் செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதாலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை அந்நாட்டுப் பொலிஸார் நடத்திய விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சந்தேகநபரான 18 வயது இளைஞரை ஜப்பான் பொலிஸார் உடனடியாகக் கைது செய்துள்ளனர்.
விசாரணையின் போது, தானும் தனது தாயாரும் அவமதிக்கப்பட்டதால் ஏற்பட்ட ஆத்திரத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் ஆவேசத்தில்தான் இந்தத் தாக்குதலை நடத்தியதாகச் சந்தேகநபர் ஒப்புக்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
