மஸ்கெலியா,ஓல்ட்டன் தோட்ட கிங்கோரா பிரிவில் இறந்த நிலையில் சிறுத்தை மீட்பு.
இச் சம்பவம் நேற்று (12)மதியம் 2 மணிக்கு மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமி மலை பகுதியில் ஹொரன பெருந்தோட்ட நிறுவனத்திற்கு உரித்தான ஓல்ட்டன் தோட்ட கிங்கோரா பிரிவில் உள்ள வனப் பகுதியில் சிறுத்தை ஒன்று இறந்த நிலையில் கிடந்ததை கண்ட அந்த பிரிவில் பணியாற்றும் தொழிலாளர்கள் தோட்ட முகாமையாளருக்கு அறிவித்தனர்.
தோட்ட முகாமையாளர் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ் எஸ் புஷ்பகுமார அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.அதனைத் தொடர்ந்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நல்லதண்ணி வன ஜீவராசிகள் அதிகாரி கவனத்திற்கு கொண்டு வந்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த நல்லதண்ணி வன ஜீவராசிகள் அதிகாரிகள் இறந்த நிலையில் காணப்பட்ட சிறுத்தையை மீட்டு உடற் கூற்று பரிசோதனைக்காக ரந்தெனிகல மிருக வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இறந்த நிலையில் காணப்பட்ட சிறுத்தை சுமார் 5 அடி நீளமும் 18 அங்குலம் உயரம் கொண்டது என நல்லதண்ணி வன ஜீவராசிகள் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மஸ்கெலியா நிருபர்.
