வவுனியாவில் தனது 14 வயது மகளைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தைக்கு, 15 வருட காலக் கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா தீர்ப்பளித்துள்ளார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பெற்றோர்கள் பிரிந்திருந்த நிலையில், தாயாரின் அரவணைப்பின்றி தந்தையின் பாதுகாப்பில் வாழ்ந்து வந்த சிறுமியே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார். குற்றச் சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 14 வயதாக இருந்ததுடன், இரண்டரை வயதில் மற்றொரு குழந்தையும் இருந்துள்ளது.
சம்பவத்தன்று மதுபோதையில் வீட்டilt இருந்த தந்தை, இக்கொடூரக் குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளார்.
இது தொடர்பான வழக்கு விசாரணைகள் 2021 ஆம் ஆண்டு வவுனியா மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இடம்பெற்று வந்த நிலையில், குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்து நீதிபதி இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.
இதன்படி, குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும், 50,000 ரூபா தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளதுடன், அதனைச் செலுத்தத் தவறின் மேலும் 1 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 1 மில்லியன் (1,000,000) ரூபா நட்டஈடு வழங்குமாறும், தவறும் பட்சத்தில் மேலதிகமாக 2 வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், சமூகத்தில் இது போன்ற குற்றங்கள் மீண்டும் நிகழாமல் தடுத்து கடுமையான எச்சரிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்மகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை!கது.
