நுவரெலியா கோட்டகல்வி இரண்டாம் வலையத்திற்கு உட்பட்ட லிந்துலை நாகசேன ரோயல் கல்லூரி ஆரம்ப கல்லூரியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு கல்லூரி அதிபர் எம்.ஜேசுதாஸன் தலைமையில் (01.04.2023) சனிக்கிழமை இடம்பெற்றது.

இதன் போது இக் கல்லூரியில் 2022 ஆம் வருடம் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்கள் மற்றும் சித்தி பெற்ற மாணவர்களுக்கு பதக்கம் அணிந்து கௌரவிக்கப்பட்டது.

அதேநேரத்தில் கல்வி சேவையில் 35 வருடங்களை பூர்த்தி செய்து ஓய்வு பெறும் லிந்துலை சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலய அதிபர் திருமதி ந.தமிழரசியின் சேவையை பாராட்டி கௌரவிப்பும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அதிதிகளாக
நுவரெலிய கல்வி வளையத்தின் உதவி பணிப்பாளர் எம்.கணேஷ்ராஜ்,
நிகழ்வின் அனுசரணையாளர் வெஸ்டர்ன் மென்பவர் நிறுவன தலைவர் திருமுடி ரகு உள்ளிட்ட
அயல் பாடசாலைகளின் அதிபர்கள்,ஆசிரியர்கள்,
பெற்றோர்கள்,மாணவர்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.

இதன் போது ரோயல் கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

