பண்டாரவளை பகுதியில் இயங்கும் பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் ஆசிரியர் ஒருவர், மாணவிகளுக்குத் தொடர்ச்சியாக ஆபாசமான குறுந்தகவல்களை அனுப்பிய குற்றச்சாட்டின் பேரில் பொலிசாரால் கடந்த 26ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டதுடன், சந்தேகநபரின் கையடக்கத் தொலைபேசியை ஆய்வு செய்துள்ளனர். இதன்போது, அவரது தொலைபேசியில் பல பெண்கள் மற்றும் சிறுமிகள், மாணவிகளது ஆபாசப் புகைப்படங்கள் பல சேமித்து வைக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இதற்கிடையில், குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அப்பகுதியில் திரண்ட பெற்றோர்கள் கடும் எதிர்ப்பையும் ஆவேசத்தையும் வெளிப்படுத்தினர். சந்தேகநபரின் தாயாரும் ஒரு ஆசிரியராகப் பணிபுரிந்து வருவதாகவும், அவர் கடமையாற்றும் பாடசாலைக்கு முன்பாகவும் தாங்கள் கடுமையான எதிர்ப்பைக் காட்டப் போவதாகப் பெற்றோர்கள் எச்சரித்துள்ளனர்.
சம்பவம் குறித்து பண்டாரவளைப் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
