செவ்வாயன்று ஐ.சி.சி. பிரீமியர் கிண்ண இறுதிப் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸை வீழ்த்தியதன் மூலம் நேபாளம் 2023 ஆசியக் கிண்ணத்தில் தனக்கான இடத்தை பிடித்துள்ளது.
இந்த வெற்றியின் மூலம், நேபாளம், இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் இணைந்து ஆசிய கிண்ணத்தில் குழு ஏ பிரிவில் இடம் பிடித்துள்ளது.
பி பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை மற்றும் பங்களாதேஷ் உள்ளன.
2023 ஆசியக் கிண்ணம் அனைத்து அணிகளுக்கும் ஒரு முக்கிய போட்டியாகும்.
ஏனெனில் இது ஆசியாவின் சிறந்த அணி எது என்பதை தீர்மானிக்கும். மேலும் 2023 உலகக் கிண்ணத்துக்கான ஆயத்தமாக இது அமையும்.
போட்டி தொடர்பான சில குறிப்புகள்
- தொடர் 50 ஓவர் கொண்ட ஒருநாள் போட்டியாக நடைபெறும்.
- இப் போட்டியில் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்கின்றன.
- இந்த தொடர் பாகிஸ்தானில் 2023 செப்டம்பர் 2 முதல் செப்டம்பர் 17 வரை நடைபெற உள்ளது.
