தந்தை தனது மகளுக்கு நஞ்சு பருக்கியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் மீண்டும் எதிர் வரும் 30திகதி வரை விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளார்.
மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள மொக்கா தோட்ட மேற் பிரிவில் தந்தை ஒருவர் தனது 20 வயது உடைய மகளுக்கு நஞ்சு பருக கொடுத்ததாக சந்தேகத்தின் பேரில் கடந்த 03 ம் திகதி இரவு கைது செய்யப்பட்டு 17ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பட்டு இருந்தவர், மேலும் ஒரு குற்றச்சாட்டு உள்ளாகி நேற்று 17.05.2023.அன்று ஹட்டன் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர் படுத்த பட்ட வேலையில் சந்தேக நபரை மீண்டும் எதிர் வரும் 31ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் பனித்துள்ளார்.
இவ்வாறு மீண்டும் இவ்வாறு விளக்கமறியலில் உள்ளவர் மொக்கா தோட்ட மேற் பிரிவில் உள்ள 48 வயது உடைய மூன்று பெண் குழந்தைகளின் தந்தையாவார் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில் நேற்று கடந்த 2.ம் திகதி இச் சம்பவம் மொக்கா தோட்ட மேற் பிரிவில் இடம் பெற்று உள்ளது.
நஞ்சு பருக்கியதாக கூறப் படும் 20 வயது உடைய பெண் கடந்த 2 ம் இரவு மஸ்கெலியா வைத்திய சாலைக்கு கொண்டு வரப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபட்டு அங்கு சிகிச்சை பெற்று வரும் வேளையில் சட்ட வைத்திய அதிகாரியிடம் தனது தந்தை தனக்கு நஞ்சு கொடுத்ததாக குறித்த பெண் கூறியுள்ளார்.
அதனை தொடர்ந்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார பணிப்புரையின் கீழ் சந்தேக நபரை டிக்கோயா பகுதியில் உள்ள டில்லிரி பகுதியில் உறவினர் வீட்டில் தங்கி இருந்த வேளையில் அங்கு வைத்து கடந்த 2 ம் திகதி இரவு கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
யுவதி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று நேற்று முன்தினம் 17.05.2023 வெளியேரும் போது சட்ட வைத்திய அதிகாரி பரிசோதனையின் பின்னர் அந்த யுவதி பல முறை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டது தெரியவந்துள்ளது.யுவதியிடம் இது தொடர்பில் விசாரணை மேற்கொண்டதில் தன்னை தனது தந்தை பல முறை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதை கூறியுள்ளார்.
நீதிவான் உத்தரவின் பேரில் பிள்ளைகள் மூன்று பேரையும் சிரிய தாய் வீட்டில் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என இன்று நீதிவான் பணித்து உள்ளதாகவும்.
இந்த சம்பவம் குறித்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார கூறுகையில் சம்பந்தப்பட்ட யுவதியின் தாய் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு வெளிநாடு சென்று உள்ளார் எனவும் அத் தாய்க்கு மூன்று குழந்தைகள் உள்ளனர் மூன்று பேரும் பெண்கள் எனவும் 9 வயது 11வயது 20 வயது உடையவர்கள் என கூறினார்.
இவ்வாறு மலையக பகுதிகளில் பெண் பிள்ளைகளை தந்தையின் பாதுகாப்பில் விட்டு செல்வதால் இவ்வாறு பல குற்ற செயல்கள் இடம் பெற்று வருகிறது.
ஆகையால் மலையக பகுதிகளில் இனியும் வெளிநாட்டு வேலைக்கு பெண்கள் போவதை நிறுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
