இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையிலான விலங்கு பரிமாற்றத் திட்டத்தின் கீழ், தாய்லாந்திலிருந்து Double Wattled Cassowary எனப்படும் 3 பறவைகள், தெஹிவளை அனுப்பப்பட்டுள்ளன.
இதற்கமைய, 9 மாதங்களான ஆண் பறவைகள் இரண்டும் ஒரு பெண் பறவையும் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.
சுமார் 05 அடி உயரமும் சுமார் 60 கிலோகிராம் எடையும் கொண்ட இந்த cassowary பறவைகள் உலகின் மிக மோசமான பறவைகளில் இரண்டாவது பெரிய பறவைக் குழுவைச் சேர்ந்தவை என்றும் மிகவும் வண்ணமயமான இந்த பறவைகளால் வானில் பறக்க முடியாது என்பது சிறப்பம்சமாகும்.
இதேவேளை இந்த விலங்குகள் பரிமாற்றம் திட்டத்தின் கீழ், இலங்கையிலிருந்து பாம்புகள், மரங்கொத்திகள் உள்ளிட்ட சில பிராணிகள் தாய்லாந்துக்கு அனுப்பவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
