மட்/மம/ஐயங்கேணி அப்துல் காதர் வித்தியாலய அதிபர் அவர்களினால் ஐயங்கேணி முஸ்லிம் கிராம அபிவிருத்திச் சங்கத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக ஐயங்கேணி முஸ்லிம் கிராம அபிவிருத்திச் சங்க வங்கிக் கணக்கில் இருந்து பணம் விடுவிப்பு செய்யப்பட்டு கிராம அபிவிருத்தி சங்க உத்தியோகத்தர் திருமதி சர்மிளா சரண்யன் அவர்களினால் இக்கழுத்துப்பட்டி (டை) உத்தியோகபூர்வமாக பாடசாலை அதிபர் அவர்களிடம் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வானது மட்/மம/ஐயங்கேணி அப்துல் காதர் வித்தியாலய அதிபர் அவர்களின் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் காலை 9 மணியளவில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஏறாவூர் நகரபிரதேச செயலக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சர்மிளா சரண்யன் அவர்கள் கலந்து கொண்டதோடு, ஐயங்கேணி முஸ்லிம் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர், பாடசாலையின் முன்னாள் அதிபர், ஆசிரியர்கள், ஏறாவூர் நகர பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.
இந்நிகழ்வில் உரையாற்றிய பாடசாலையின் முன்னாள் அதிபர் றிம்சாத் அவர்கள் இப்பாடசாலைக்கும் இச்சங்கத்திற்கும் இடையிலான தொடர்பு மிக நெருக்கமானதாகும், எமது பாடசாலைக்கு இச்சங்கத்தின் ஊடாக பல உதவிகள் கிடைக்கப்பெற்றுள்ளது.
எதிர்காலத்திலும் இப்பாடசாலையினுடனான நட்புறவைப் பேணி எமது பாடசாலையின் தேவைகளை அறிந்து சங்கத்தின் ஊடாக பெற்றுக் கொடுப்பதற்கும் இப்பாடசாலையின் அபிவிருத்தியிலும் பங்குதாரர்களாக இச்சங்கம் செயற்பட வேண்டும் என்றும் இச்சங்கத்தினை திறன்பட செயற்படுவதற்கு ஒத்துழைப்பு வழங்கி கொண்டிருக்கும் ஏறாவூர் நகரபிரதேச செயலக பிரதேச செயலாளர், கிராம அபிவிருத்தி சங்க உத்தியோகத்தர், மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கும் தனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்.










