அப்புத்தளை தம்பேத்தனை இல.1 தமிழ் கனிஷ்ட வித்தியாலய மாணவர்கள் முதன்முறையாக மாகாண மட்டத்திற்கு தெரிவு!
அப்புத்தளை தம்பேத்தனை இல.1 தமிழ் கனிஷ்ட வித்தியாலய மாணவர்கள் பாடசாலை வரலாற்றில் முதன்முறையாக வலய மட்ட போட்டிகளில் வெற்றிப்பெற்று மாகாண மட்டத்திற்கு தெரிவாகியுள்ளதாக பாடசாலையின் கணிதப்பாட ஆசிரியர் பிரதாப் தெரிவித்தார்.
அப்புத்தளை கோட்டம் மெய்வல்லுனர் போட்டிகளில் பங்குப்பற்றிய மாணவர்களில் 41 மாணவ,மாணவிகள் வெற்றியையும் பதிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
3000 மீட்டர் ஓட்டப்போட்டியில் முதலாம் இடத்தையும் இரண்டாம் இடத்தையும் 1500 மீட்டர் ஓட்டப்போட்டி இரண்டாம் இடத்தையும் பாடசாலை மாணவர்கள் பெற்றுள்ளனர்.
மேலும் குறித்த மாணவர்களுக்கு டெஸ்மீ டெக்ஸ்டையில் கொழும்பு வியாபார நிலையத்தின் அனுசரணையில் விளையாட்டு சீருடை அதிபர் பரமேஷ்வரன் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்படத்தக்கது.



