ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் புதிய தலைவராக ரியாஸ் மிஹுலர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று நடைபெற்ற ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை கூட்டத்தின் போது இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ரொஹான் பெர்னாண்டோ, பணிப்பாளர் சபை தன்னை SLT இன் தலைவர் பதவியில் இருந்து நீக்கியதாக குற்றம்சாட்டினார்.
ரோஹான் பெர்னாண்டோ 2020 ஜனவரியில் நிறுவனத்தின் பணிப்பாளர்/தலைவராக நியமிக்கப்பட்டார்.
ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பங்குகள் தனியார்மயமாக்கல் முயற்சிகளின் முன்மொழிவுகளுக்கு மத்தியில் இந்த நியனம் வழங்கப்பட்டுள்ளது.
