வடமேல் மாகாணம்- புத்தளம் மாவட்டம், கல்பிட்டி, ஏத்தாலை அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோயில்
தாயாக கருணை செய்து காத்தருளும் அன்னை காமாட்சி
காலமெல்லாம் உடனிருந்து காத்து அருளிடுவாள்
நம்பியவள் அடி தொழுது நலன்கள்யாவும் பெற்றிடுவோம்
ஏத்தாலை கோயில் கொண்ட எங்கள் அன்னை அருளிடுவாள்
மேற்கிலங்கை கோயில் கொண்டு மேன்மைகள் தரும் அன்னை காமாட்சி
மேதினியில் நன்மைகள் பெருகிடவே உரியவழி காட்டிடுவாள்
அன்புமிகு அவள் அடியை நம்பித் தொழுதிடுவோம்
ஏத்தாலை கோயில் கொண்ட எங்கள் அன்னை அருளிடுவாள்
பாவங்கள் துடைத் தெறிந்து பக்குவமாய் காக்கும் அன்னை காமாட்சி பார்போற்ற நாம் வாழ வழியமைத்து தந்திடுவான்
கருணைமிகு அவளடி தொழுது வாழ்வில் நலம் பெற்றிடுவோம்
ஏத்தாலை கோயில் கொண்ட எங்கள் அன்னை அருளிடுவாள்
நேசமுடன் எம்மை நித்தமும் காத்தருளம் அன்னை காமாட்சி நிறைந்த மனங்கொண்டெமக்கு நேர்வழியைக் காட்டிடுவான்
நெஞ்சம் நிறை பக்தியுடன் நம்பித் தொழுதிடுவோம்
ஏத்தாலை கோயில் கொண்ட எங்கள் அன்னை அருளிடுவாள்
அச்சம் அகற்றி நல்லருள் தரும் அன்னை காமாட்சி
அனுதினமும் நிம்மதியாய் வாழ நல்ல வழிதந்திடுவான்
அச்சம் களைந்து என்றும் அவனடியைப் பற்றிடுவோம்
ஏத்தாலை கோயில் கொண்ட எங்கள் அன்னை அருளிடுவாள்
கருணைமிகு திருமுகத்தை உடைய அன்னை காமாட்சி
கலக்கமின்றி வாழ நல்ல வழியமைத்துத் தந்திடுவாள்
காலமெல்லாம் அன்னையவள் திருவடியை பற்றிடுவோம்
ஏத்தாலை கோயில் கொண்ட எங்கள் அன்னை அருளிடுவாள்.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.



