புனித யூதா ததையுவின் வருடாந்த திருவிழா அக்கரப்பத்தனை ஆட்லோ தோட்டத்தில் நாளை 10 ம் திகதி மாலை 06 மணிக்கு கொடி ஏற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
அதனை தொடர்ந்து 11/10 /2025 அன்று சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு ஆராதனை பங்கு தந்தையால் முன்னெடுப்படவுள்ளது.
12/10/2025 ஞா யிற்று கிழமை அன்று காலை 11 மணிக்கு வரவேற்பு நிகழ்வுகளுடன் திருநாள் திருப்பலி பங்கு தந்தை அவர்களால் ஒப்புக்கொடுக்கப்படும் அதனை தொடர்ந்து புனித யூதா ததையுவின் திருசுரூப பவனியும் ஆசீர்வாதமும் நடைபெறும்.



