பலாங்கொடை – புலத்கம பகுதியில் ஆயுதமொன்றில் தாக்கி ஆண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பிரதான சந்தேகநபருக்கும் உயிரிழந்தவருக்கும் இடையில் தனிப்பட்ட முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து சந்தேகநபர், அவரது மகன் மற்றும் உறவினர் இருவர் இணைந்து உயிரிழந்தவரை தாக்கியுள்ளதாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த 41 வயதுடைய குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்தார்.
இந்த நிலையில், தாக்குதலுடன் தொடர்புடைய 68 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பிரதான சந்தேகநபர் அவரது மகன் உள்ளிட்டவர்கள் தலைமறைவாகியுள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
