மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்.27.09.2023.
மத்திய மலைநாட்டில் தொடர்ந்து பெய்யும் கன மழையால் மவுசாகல காசல்ரீ மேல் கொத்மலை கென்யோன் லக்சபான நவலக்சபான பொல்பிட்டிய கலுகல விமலசுரேந்திர ஆகிய நீர் தேக்கங்களுக்கு அதிக அளவில் குப்பைகள் வந்து சேர்ந்தது உள்ளது.
இவற்றில் அதிகளவில் பிலாஸ்டிக் பொருட்கள் மற்றும் ஏனைய குப்பைகள் ஆகும்.
இவ்வாறான குப்பைகளை பெருந்தோட்ட பகுதிகளிலும், நகரிலும், மற்றும் கிராமப்புறங்களில் வாழும் மக்கள் வீசுவதால் அப் பகுதியில் உள்ள ஓடைகள் மற்றும் காட்டாறு கள் ஊடாக நீர் தேக்கங்களில் வந்து குவிந்து உள்ளது.
இதனால் நீர் தேக்கங்களில் வாழும் உயிரினங்கள் அழிந்து போகும் நிலை தோன்றியுள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் கவணம் செலுத்தி நீர் தேக்க பகுதிகளில் உள்ள அனைத்து குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் மீனவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.