காலி மாவட்டத்தில் ஆபரண உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு அவர்களின் கைத்தொழிலை முன்னேற்றுவதற்காக அவசியமான உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பதிரண தலைமையில் இடம்பெற்றது.
காலி மாவட்ட நகைத் தொழிலுக்காக அதிக ஆர்வம் காட்டும் மாவட்டமாகக் அடையாளம் காணப்பட்டுள்ளதால் இது தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கைத்தொழில் ஏற்றுமதி வலயமாக உற்பத்திப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு அதிக பிரயத்தனத்துடனான துறையாக இவ்வாபரணக் கைத்தொழிலை முன்னேற்றுவதற்கு விசேட கவனம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது இக்கைத்தொழில் முன்னேற்றத்திற்கு அவசியமான தலா ஒரு முயற்சியாளருக்கு 60,000 ரூபா பெறுமதியான 60 உபகரணத் தொகுதிகள் 60 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
