பாடசாலையை விட்டு வெளியேறி தசாப்த்தங்களை கடந்தும் மீண்டும் கௌரவிக்கப்பட்ட ஆசிரியர்கள்.
சர்வதேச ஆசிரியர் திணத்தை முண்ணீட்டு முன்மாதிரியான நிகழ்வு.
திஹாறிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியின் 2003ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரம் மற்றும் 2006 A/L பரிச்சை எழுதிய மாணவர்களினால் தரம் ஒன்று தொடக்கம் 13 வரை கல்வி கற்பித்த ஆசிரியர்களை நன்றியுடன் ஞாபகப்படுத்துவதற்காக கடந்த (21 )சனிக்கிழமை தினம் திஹாறிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியில் மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்த ஒன்று கூடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனை ஏற்பாடு செய்வதற்காக கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக 2003 O/L மற்றும் 2006 A/L மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் செயல்பட்டதன் விளைவாக கடந்த சனிக்கிழமை தினம் திஹாறிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியின் இவ்வாறான ஒரு நிகழ்வினை நடத்துவதற்கு முடிந்தது . திஹாறிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியில் ஆசிரியராக கடமை ஆற்றி தற்போது வேறு பாடசாலைகளில் கடமையாற்றிக் கொண்டிருக்கும் ஆசிரியர்களும். இதே கல்லூரியில் தற்போதும் கூட கடமையாற்றிக் கொண்டிருக்கக் கூடிய ஆசிரியர்களும், அதேபோல தற்போது ஓய்வு நிலையில் இருக்கக்கூடிய ஆசிரியர்களும் இலங்கையில் பல்வேறு பிரதேசங்களில் இருந்தும் அன்றைய தினம் இந்நிகழ்வில் கலந்து சிறப்பிப்பதற்காக வருகை தந்திருந்தமை வரவேற்கத்தக்கது. அதேபோல இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இந்தக் கல்லூரியில் 2003 ஆம் ஆண்டு O/L மற்றும் 2006ம் ஆண்டு A/L வகுப்புக்களில் கற்ற மாணவர்கள் நாட்டின் நாலா பகுதிகளிலும் இருந்து இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக குடும்ப சகிதம் வருகை தந்திருந்தமை இந்நிகழ்வினை மேலும் மெருகூட்டியது .

மேலும்
இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நாங்கள் அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியில் கல்வி பயின்ற காலப்பகுதியில் கடமையாற்றிய அதிபர்கள், ஆசிரியர்கள் அதேபோன்று சிற்றூலியர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு அவர்கள் அனைவரும் கௌரவிக்கப்பட்டு ஞாபாகார்த்த சின்னம் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும். திஹாறிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியின்
2003 0/L மற்றும் 2006 A/L மாணவர்களின் முன்மாதிரியான இந்த செயற்த்திட்டம் பலராலும் போற்றப்படுகின்றது.
நன்றி
Dilshard Nizam
