• முகப்பு
  • இலங்கை
  • கோவில்
  • சினிமா
  • மலையகம்
  • வாழ்க்கை
  • வெளிநாடு
What's Hot

பேருந்திற்கு ஆணி வைத்ததால் பேருந்தை இடை நிறுத்திய சாரதி‌.

December 4, 2023

பலாங்கொடை பலலேபெந்த வீதியின் ஊடக பயணிக்கும் சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு.

December 4, 2023

200 வருடங்களின் பின்னர் தோட்டத்திற்கு சட்டத்தினூடாக முகவரி பெற்றுக் கொடுத்த மலையக இளைஞன்.!

December 4, 2023
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
  • முகப்பு
  • இலங்கை
  • கோவில்
  • சினிமா
  • மலையகம்
  • வாழ்க்கை
  • வெளிநாடு
Malayagam.lk
Home » நுவரெலியாவில் வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை !
மலையகம்

நுவரெலியாவில் வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை !

ThanaBy ThanaDecember 26, 2022No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

 

நானுஓயா நிருபர்

நுவரெலியா மாவட்டத்தில் நிலவுகின்ற மழையுடனான காலநிலையினைத் தொடர்ந்து கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. அத்துடன்
மத்திய மலை நாட்டில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் சீரற்ற வானிலையால் நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து கடும் மழை பெய்து வருகிறது.

நுவரெலியா – ஹற்றன் ,நுவரெலியா – கண்டி , நுவரெலியா -வெளிமடை போன்ற பிரதான வீதிகளிலும் ரதல்ல, நானுஓயா , டெஸ்போட் ,கந்தபளை உள்ளிட்ட பிரதேசங்களிலும் அதிக பனிமூட்டம் நிலவி வருகின்றது.
அதிகளவான பனிமூட்டம் காணப்பட்ட நிலையில் சாரதிகள் வாகனங்களை செலுத்துவதில் பெரும் இடையூறுகளை சந்திக்கின்றனர்.

எனவே பிரதான வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் எச்சரிக்கையாகவும் அவதானத்துடனும் தங்களுடைய வாகனங்களை செலுத்துமாறும் , பனிமூட்டம் நிலவும் வேளையில் தங்களுடைய வாகனத்தின் முகப்பு விளக்குகளை ஒளிரச்செய்து தமக்குரிய பக்கத்தில் வாகனங்களை செலுத்த வேண்டும் என போக்குவரத்து பொலிஸார் சாரதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்நிலையிலேயே நுவரெலியாவிலிருந்து தலவாக்கலை செல்லும் பிரதான வீதி நானுஓயா சந்திக்கு அருகில் வீதி தாழிறங்கியுள்ளது தொடர் மழைக்காரணாமாக இந்த வீதியில் மேலும் பல இடங்களிலும் சிறிய மண்சரிவுகள் , பிரதான வீதியில் வெடிப்புக்கள் உள்ளதால் வீதியினை சீரமைக்கும் வரை அவ்வீதியினூடாக பயணங்களை மேற்கொள்ளும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செல்லுமாறும், கனரக வாகனங்களை அவ்வீதியினூடாக செலுத்த வேண்டாம் எனவும் நானுஓயா பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். அத்துடன் இந்த பகுதி மேலும் தாழிறங்கும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

Related Posts

200 வருடங்களின் பின்னர் தோட்டத்திற்கு சட்டத்தினூடாக முகவரி பெற்றுக் கொடுத்த மலையக இளைஞன்.!

December 4, 2023

மஸ்கெலியா நோட்டன் பிரதான வீதியில் பகுதியளவில் நிலம் தாழிறங்கும் அபாயம்.!

December 4, 2023

ஹப்புத்தளை, யஹலபெத்த பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு.

December 4, 2023

அதிக வேகத்தில் பேருந்தை செலுத்தும் சாரதியின் அடாவடி தனம்; பீதியில் பயணிகள்.

December 4, 2023
Editors Picks

பேருந்திற்கு ஆணி வைத்ததால் பேருந்தை இடை நிறுத்திய சாரதி‌.

December 4, 2023

பலாங்கொடை பலலேபெந்த வீதியின் ஊடக பயணிக்கும் சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு.

December 4, 2023

200 வருடங்களின் பின்னர் தோட்டத்திற்கு சட்டத்தினூடாக முகவரி பெற்றுக் கொடுத்த மலையக இளைஞன்.!

December 4, 2023

இலங்கை கிரிக்கட் தெரிவுக்குழுவின் புதிய தலைவராக உபுல் தரங்க.

December 4, 2023

பேருந்திற்கு ஆணி வைத்ததால் பேருந்தை இடை நிறுத்திய சாரதி‌.

December 4, 2023

பலாங்கொடை பலலேபெந்த வீதியின் ஊடக பயணிக்கும் சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு.

December 4, 2023

200 வருடங்களின் பின்னர் தோட்டத்திற்கு சட்டத்தினூடாக முகவரி பெற்றுக் கொடுத்த மலையக இளைஞன்.!

December 4, 2023
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
© 2023 Malayagam.lk. Designed by Gnext.

Type above and press Enter to search. Press Esc to cancel.