ஹிங்குராக்கொட பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட யுதகனாவ கிராமத்தில் கணவன் மனைவியை மண்வெட்டியால் அடித்துக் கொன்றுள்ளார்.
அந்தப் பகுதியைச் சேர்ந்த ஹெட்டியாராச்சிலாகே லசந்த சந்தமாலி என்ற 27 வயதுடைய 2 பிள்ளைகளின் தாயே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கணவன் தனது மனைவியை மண்வெட்டியால் தாக்கியதில் அவர்களது 2 வயது குழந்தையும் சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த பெண்ணின் கணவர் மெதிரிகிரிய பிரதேசத்தில் மறைந்திருந்த போது ஹிங்குராக்கொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, ஹிங்குராக்கொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
பணத் தகராறில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக குறித்த நபர் பெண்ணை மண்வெட்டியால் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
