கொஸ்கம பகுதியில் பயணிகள் பஸ் ஒன்றின் மீது மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் மூவர் காயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்து நேற்றிரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொஸ்கம – அளுத் அம்பலம பகுதியில் நிலவிய அதிக மழையுடனான வானிலையை அடுத்தே, இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொழும்பிலிருந்து அவிசாவளை நோக்கி பயணித்த பஸ் ஒன்றின் மீதே மரம் முறிந்து வீழ்ந்துள்ளது.
விபத்தில் காயமடைந்த மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மொஹமட் அலி
