உதைபந்தாட்ட திறனை மேம்படுத்தும் நோக்கத்தோடு
மன் புனித ஆனாள் தேசிய கல்லூரி (வங்காலை) கால்ப்பந்தாட்ட இடுக்கை மற்றும் விளையாட்டு உபகரணங்கள் உத்தியக பூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.
உதைபந்தாட்ட திறனை மேம்படுத்தும் நோக்கத்தோடு
மன் புனித ஆனாள் தேசிய கல்லூரி (வங்காலை)கால்ப்பந்தாட்ட இடுக்கை மற்றும் விளையாட்டு உபகரணங்களை உத்தியக பூர்வமாக 14.11.2023 செவ்வாய்கிழமை பாடசாலை அதிபர் திரு. மெரில் பிளேவின் குரூஸ், மற்றும் அருட் சகோ.அன்ரன் யோசப் மற்றும் மாணவர்களின் முன்னிலையில் வழங்கி வைக்கப்பட்டது.
புனித ஆனாள் கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி குழு வங்காலை சுவிஸ் அமைப்பானது கடந்த பல மாதங்களாக பாடசாலை மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு கல்வி மற்றும் விளையாட்டு ,சமூக அபிவிருத்தியில் அக்கறை கொண்டு ஒரு அமைப்பாக செயற்பட்டுக்கொண்டு வருகின்றோம்.
அந்த வகையில்
மன் புனித ஆனாள் (வங்காலை)தேசிய கல்லூரி பாடசாலை மாணவர்களின் விளையாட்டை ஊக்குவிக்கும் முகமாக முன்னைய நாள் பாடசாலை ஓய்வு நிலை அதிபர் திருவாளர் பிரான்சிஸ் ஸ்டான்லி டிமெல். லெம்பேட் அவர்களினால் புனித ஆனாள் கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி குழு வங்காலை, சுவிஸ் அமைப்பினரிடம் மாணவர்கள் மட்டத்தில் உதைப்பந்தாட்டத்தினை ஊக்குவிக்கு முகமாக எமது அமைப்பினரிடம்
கோரிகை ஒன்றினை முன் வைத்திருந்தார்.
இதற்கு அமைவாக கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட எமது அமைப்பின் நிர்வாக குழு மற்றும் அங்கத்தவர்களின் தீர்மானத்திற்கு அமைவாக இதனை வங்காலைப் பாடசாலைக்கு செய்து கொடுப்பதற்கான முடிவினை எடுத்திருந்தோம்.
இதன் பிரகாரம் 14.11.2023 செவ்வாய்கிழமை கல்லூரியின் அதிபர் திரு. மெரில் பிளேவின் குரூஸ் அவர்களிடம் புனித ஆனாள் கல்வி மற்றும் சமூக அபிவிருத்திக்குழு வங்காலை சுவிஸ் அமைப்பின் நிர்வாக அங்கத்தவர்கள் நேரடியாக சென்று வழங்கியிருந்தார்கள்.
உதைபந்தாட்ட திறனை மேம்படுத்தும் பொருட்டு இந்த உதவியை வழங்குவதற்கு நிதியுதவியை வழங்கிய புனித ஆனாள் கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி குழு வங்காலை சுவிஸ் அமைப்பிற்கும் கால்பந்தாட்ட இடுக்கைகளை மன்னாரில் இருந்து வங்காலைக்கு கொண்டு வருவதற்கு வாகன சேவையினை வழங்கிய திருவாளர் எல்லோ யேசுதாஸ் லெம்பேட், (தன்சுகி பந்தல் சேவை வங்கால) உரிமையாளர் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றி
புனித ஆனாள் கல்வி மற்றும் சமூக அபிவிருத்திக் குழு வங்காலை சுவிஸ்.






