உலக நகரங்கள் தினத்தை முன்னிட்டு நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நடாத்தப்பட்ட கொழும்பு மாவட்ட ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள் நேற்று (14) வழங்கப்பட்டன. இது நகர அபிவிருத்தி அதிகார சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்த ஆண்டு ஒக்டோபர் 31 ஆம் திகதி வரும் உலக நகரங்கள் தினத்தின் கருப்பொருள் “அனைவருக்கும் நிலையான நகர்ப்புற எதிர்காலத்திற்கு நிதியளித்தல்” என்பதாகும்.
இந்த ஓவியப் போட்டி மூன்று பிரிவுகளின் கீழ் நடைபெற்றது. 1-5 வகையின் கீழ் “எனக்கு பிடித்த நகரம்”, வகை 6-11 கீழ் “எதிர்கால நகரம் மற்றும் போக்குவரத்து”, 12-13 வகையின் கீழ் “எரிசக்தி நெருக்கடி மற்றும் நிலையான நகரமயமாக்கல்” என்ற தலைப்புகளின் கீழ் பிள்ளைகள் படங்களை வரைவதற்கு வாய்ப்பு கிடைத்தது.
இந்நிகழ்வில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர, பிரதிப் பணிப்பாளர்கள், பிள்ளைகள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
முனீரா அபூபக்கர்
2023.11.15
புகைப்படம் – 12-13 பிரிவின் கீழ் “எரிசக்தி நெருக்கடி மற்றும் நிலையான நகரமயமாக்கல்” ஓவியம் வரைந்து முதலிடத்தைப் பெற்ற பன்னிப்பிட்டி தர்மபால வித்தியாலயத்தைச் சேர்ந்த அரங்கலை லோச்சன யசித் மாணவனுக்கு நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் திரு.பிரசாத் ரணவீர சான்றிதழை வழங்குதல்.
