தனது காதலியை வரவழைப்பதற்காக அவளுடைய சகோதரனின் ஏழு வயது மகளை கடத்திச் சென்ற இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவமொன்று மொரகஹஹேன பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
குறித்த இளைஞன் சிறுமியை கடத்திச்சென்று சிறுமியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை காதலிக்கு அனுப்பியுள்ளதுடன் வரவில்லை என்றால் அச் சிறுமியை கொலை செய்து விடுவதாக மிரட்டி காதலியை வரவழைத்துள்ளார். பின்னர், காதலியின் உறவினர் ஒருவரின் வீட்டில் சிறுமியை விட்டு காதலியை கடத்திச்சென்றுள்ளார்.
இந்நிலையில் கடத்தப்பட்ட யுவதியை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை ஆரம்பித்த மொரகஹஹேன பொலிஸார், கோனாபினுவல பிரதேசத்தில் வைத்து குறித்த இளைஞனையும் கடத்தலுக்கு உதவிய அவரது மைத்துனரையும் செவ்வாய்க்கிழமை (14) கைது செய்துள்ளனர்.
