மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.17.11.2023.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் நீர் தேக்க பகுதிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இதன் படி மவுஸ்சாக்கலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது இன்னும் ஒரு அடி நீர் நிரம்பும் பட்சத்தில் வான் கதவுகள் வழியாக நீர் வெளியேற்றம் செய்ய படலாம்.
அதேபோல் காசல்ரீ நீர் தேக்கத்தின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து உள்ளது.
இன்னும் ஒரு அடி நீர் நிரம்பும் பட்சத்தில் நீர் தேக்கத்தின் வான் கதவுகள் தானாகவே திறந்து நீர் வெளியேறும்.
கென்யோன் நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளலவில் உள்ளது விமலசுரேந்திர நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளலவில் உள்ளது அதிக அளவில் நீர் வரத்து இருக்கும் பட்சத்தில் தானாகவே நீர் வெளியேறும் லக்சபான நவலக்சபான பொல்பிட்டிய கலுகல ஆகிய நீர் தேக்கங்களும் நீர் நிரம்பிய பின்னர் நீர் வெளியேற்றம் செய்யப்படலாம்.
இதனால் தாழ் நிலப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.
குறிப்பாக களனி கங்கையை அன்மித்த பகுதிகளில் உள்ள அனைத்து மக்களும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என நீர் மின் நிலைய அதிகாரி மற்றும் நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் நந்தன கலபட வேண்டுகோள் விடுத்துள்ளார்.

