தமிழகத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சியான Zee தமிழ் நடத்திய சரிகமப இசை நிகழ்ச்சியில் இலங்கையை சேர்ந்த சிறுமி கில்மிஷா வெற்றி பெற்றுள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் இந்தியாவின் ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் முதல் இடத்தை பெற்ற முதல் இலங்கையர் என்ற பெருமையை கில்மிஷா தனதாக்கிக்கொண்டார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆரம்பமான சரிகமப இசை நிகழ்ச்சியில் இலங்கையை சேர்ந்த இருவர் கலந்துகொண்டனர்.
மலையகத்தைச் சேர்ந்த அஷானி மற்றும் கில்மிஷா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.
இவர்களில் கில்மிஷா இறுதிப் போட்டிக்கு தெரிவாயிருந்ததுடன், அஷானி இறுதித் தருணத்தில் போட்டியில் இருந்து வெளியேறினார்.
இந்த நிலையில், இன்றைய தினம் இறுதிப் போட்டியானது சென்னை நேரு உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்றது.
இன்றைய தினம் இடம்பெற்ற இறுதிச்சுற்றில் வெற்றி பெற்று சரிகமப இசை நிகழ்ச்சியின் 1வது வெற்றியாளராக கில்மிஷா வெற்றி வாகை சூடினார்.
இவருக்கு மலையகம்.lk சார்பாக வாழ்த்துக்கள்!
