பதுளை, ஸ்ப்ரிங்வெளி, மேமலை, நல்லமலை தோட்டத்தில் உள்ள, இல 4. லயன், பெருந்தோட்ட குடியிருப்பொன்று பாரியதொரு மண்சரிவிற்கு முகம் கொடுத்துள்ளது. இக்குடியிருப்பில் 12 குடும்பத்தினை சேர்ந்த 40ற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெண்கள் மற்றும் சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர்.
இந்த பாரிய மண்சரிவினால் பாதிக்கப்பட்ட அனைவரையும் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு கோரப்பட்ட போதிலும் அவர்களுக்கான பாதுகாப்பான வசிப்பிடமொன்று இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
பதுளை மாவட்டத்தில் தற்போது காணப்படுகின்ற சீரற்ற காலநிலையின் காரணமாக இவ்விடயம் தொடர்பில் தொடர்புடைய அதிகாரிகள் மிகவும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
பதுளை:சதா




